Thursday, September 10, 2009

'குட்டி' சொர்க்கம்

ஆசைகள் உள்ளவரை
கவலைகள் தொடர்ந்து வரும்
உடமைகள் எண்ணும்வரை
கனவுகள் விளைந்து வரும்
இரண்டின் விளைநிலமும்
இன்றில் நிற்கவிடா இழிமனமே

நடப்பவை யாவும்
நாயகன் உளப்படி;
திடமாய் இதை உணர
தெளியும் சிந்தை

அவனியில் எல்லாம்
அனுபவமாய்க் கண்டால்
குழந்தையின் குதூகலம்
நிச்சயம்... நிரந்தரம்.

No comments: