Saturday, August 15, 2009

கொடு

பொருள் கிடைத்தால், பொருள் கொடுப்பேன்
அருள் கிடைத்தால், அருள் கொடுப்பேன்

பொருளை
காணாதவர்க்குக் கொடுத்தால்
கருணை என்கிறார்கள்;
கண்டவர்க்குக் கொடுத்தால்
காமம் என்கிறார்கள்.

எனவே
பொருள் வேண்டாம் இறைவா
அருள் கொடு.
பின்
யாருக்குக் கொடுத்தாலும்
கருணையே நிலையாகும்.

No comments: