பெருங்கருணைத் தாயே
பேரறிவுத் தந்தையே
உங்களை மறந்து
மண்ணிலே இறைந்து
இன்று
மனம் வருந்தி
மன்னிப்பு வேண்டி
திருமுகம் காண
கதவைத் தட்டிக்
காத்திருக்கிறது
உங்கள் மழலை
அம்மையப்பனே
அடைக்கலம் தா.
தந்தையே எந்தன்
கொடுங்காமம் கொல்க
தாயே எந்தன்
கடுங்கோபம் வெல்க
இரட்டைத் தடுப்புகளும்
இடிந்து போகட்டும்
இறைவனின் இறக்கம்
இப்பொழுதே ஆகட்டும்
ஊடகமாக மாறுவேன்
உலகம் உய்ய.
Wednesday, August 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment