Wednesday, August 20, 2008

மீண்ட சொர்க்கம்

பெருங்கருணைத் தாயே
பேரறிவுத் தந்தையே
உங்களை மறந்து
மண்ணிலே இறைந்து
இன்று
மனம் வருந்தி
மன்னிப்பு வேண்டி
திருமுகம் காண
கதவைத் தட்டிக்
காத்திருக்கிறது
உங்கள் மழலை
அம்மையப்பனே
அடைக்கலம் தா.

தந்தையே எந்தன்
கொடுங்காமம் கொல்க
தாயே எந்தன்
கடுங்கோபம் வெல்க
இரட்டைத் தடுப்புகளும்
இடிந்து போகட்டும்
இறைவனின் இறக்கம்
இப்பொழுதே ஆகட்டும்
ஊடகமாக மாறுவேன்
உலகம் உய்ய.

No comments: