Saturday, December 2, 2006

உயிர் எழு(த்)து

அழுக்கு மனம் நீக்கி,
ஆன்மாவைத் தரிசி.
இருமை விலக,
ஈகை நிறையும்.
உலகியலை உணர்ந்து,
ஊழினை நடத்து.
எல்லையில்லா இறைமையின்,
ஏகாந்தம் கண்டுணர்.
ஐயம் தெளியும்.
ஒன்றில் நிலைத்து,
ஓய்வில் விழி.
ஒளடதம் இஃதே.

0 comments: