Saturday, December 2, 2006

உயிர் எழு(த்)து

அழுக்கு மனம் நீக்கி,
ஆன்மாவைத் தரிசி.
இருமை விலக,
ஈகை நிறையும்.
உலகியலை உணர்ந்து,
ஊழினை நடத்து.
எல்லையில்லா இறைமையின்,
ஏகாந்தம் கண்டுணர்.
ஐயம் தெளியும்.
ஒன்றில் நிலைத்து,
ஓய்வில் விழி.
ஒளடதம் இஃதே.

No comments: