திருநடனம் காண, தெருநடனம் மூடு
சிலம்பொலி கேட்க, வம்பொலி கட
பெருவெடிப்பின் மணம் கமழ, கீழ்நாசி அடை
அருமௌன அமுதுண்ண, அழல்வாய்ப் புதை
செந்தீயில் கருக, செல்புண்கள் சிதை
ஐம்புலக் காட்டை அடியோடு அழித்து
செம்பொருள் காணும் சிந்தையில் நிறுத்து
நீ அலாத நினைப்பொன்று
நெஞ்சிலில்லா நிலைகொடு
உன்னைக் கொள்ள, என்னைக் கொல்
யானும் அழிய; எனதும் கரைய,
இறைவா!
Saturday, December 9, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment