அன்புப் பயிர் வளர்க்க
ஆனது ஒரு வழி
நெஞ்ச மேடுபள்ளம்
உழுது சமன்படுத்து
ஆண்டவனை வணங்கி
அருள்மழை தருவி
நல்லெண்ண விதை எடுத்து
உறவு நஞ்சை எங்கும் தூவு
சிறுவட்ட நாற்றைப் பிடுங்கி
பெருவட்டத்தில் பரப்பு
பொருளுதவி உரமிட்டுப்
புண்ணியங்கள் சேமி
எதிரிகளிடம் மட்டும்
பூச்சிக்கொல்லியாய் மாறு
ஊழல் களைகள் உயிர் குடிக்கவரும்
கடுந்தண்டனைக் களைக்கட்டால்
வீணர்களை வேரறு
அன்புப் பயிர் செழித்து
அவனி நிறையட்டும்
நிம்மதிப் பெருவிளைச்சல்
நம் நெஞ்சை நிரப்பட்டும்.
Wednesday, December 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment