Wednesday, December 20, 2006

கருணை வேளாண்மை

அன்புப் பயிர் வளர்க்க
ஆனது ஒரு வழி
நெஞ்ச மேடுபள்ளம்
உழுது சமன்படுத்து
ஆண்டவனை வணங்கி
அருள்மழை தருவி
நல்லெண்ண விதை எடுத்து
உறவு நஞ்சை எங்கும் தூவு
சிறுவட்ட நாற்றைப் பிடுங்கி
பெருவட்டத்தில் பரப்பு
பொருளுதவி உரமிட்டுப்
புண்ணியங்கள் சேமி
எதிரிகளிடம் மட்டும்
பூச்சிக்கொல்லியாய் மாறு
ஊழல் களைகள் உயிர் குடிக்கவரும்
கடுந்தண்டனைக் களைக்கட்டால்
வீணர்களை வேரறு
அன்புப் பயிர் செழித்து
அவனி நிறையட்டும்
நிம்மதிப் பெருவிளைச்சல்
நம் நெஞ்சை நிரப்பட்டும்.

No comments: