காமத் தட்டும்
ஞானத் தட்டும்
மாறி மாறி ஏறி இறங்கி
ஆடும் ஊஞ்சல்
அதட்டி நிறுத்தி
நடுமுள் என்றும்
நிலையில் நின்று
வானம் நோக்கும்
வலிமை தந்து
களம் சில நின்று
வளம் பல கொன்று
விண்ணை அடைந்து
விடுதலை ஆகும்
வரம்கொடு இறைவா;
வணங்குதல் கடனே.
Tuesday, December 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment