Thursday, December 6, 2007

விட்டில் பூச்சி

‘யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’

மண்டையில் ஏற்றிய இறைவா
மனதில் ஏற்றாதது ஏனோ?

எத்தனை முறை விட்டில் ஆவது
எத்தனை முறை உயிர்த்தெழுவது
ஒரு பிறப்பில் இத்தனை மரணங்களா?

போதும் இந்த மரண விளையாட்டு,

இதுவரை காத்தமைக்கு (GUARD) நன்றி
இனி விஷப்பரிட்சை இல்லை.

இதுவரை காத்தமைக்கும் (WAIT) நன்றி
இதோ வந்துகொண்டிருக்கிறேன்.

கருகிய சிறகுகள்
காற்றிலே பறக்கட்டும்

விளக்குகளை;
குத்து(ம்) விளக்குகளை
வட்டமடிக்கும் வெட்டிச் சிறகுகள்
இனி வேண்டாம்
ஒருவழிப் பாதையில்
ஊர்ந்து வந்தாவது
உனை அடைதல் உறுதி
என்றாவது ஒரு நாள்.

No comments: