Thursday, December 6, 2007

குரு தட்சணை

கொடுக்கப்பட்ட
மனக் கள்ளக்கோல்
மாங்கனியைப் பறிக்கவே;
மாதுளங்களை அல்ல.

அதிகாரத்தின் தவறான உபயோகம்
தரும் பரிதாபப் பணிநீக்கம்.

* * * * * * * * *

குருவிற்கும்
வித்தைக்கும் ஏற்ப
தட்சணையும் மாறும்.

உயர்ந்த குருவிற்கு
உன்னத வித்தைக்கு
உனது தட்சணை குறைவுதான்.

* * * * * * *

வித்தை விதைக்கப்படுவதும்
நாளை அறுக்கப்படுவதும் உறுதி.

தட்சணை அவனால்
தட்டிப் பறிக்கப்படுவதைவிட
அடிபணிந்து கொடுப்பதே
அறிவுடமை.

கொடுத்துவிடு.

No comments: