Thursday, December 6, 2007

வெற்றித் தோல்வி

பணிக்கப்பட்டது நிர்வாணம்
மனம் யாசித்தது கோவணம்
கிடைத்ததோ சொத்தைக் கடலை.

பட்டுக் கோவணத்தில்
பலப்பல ஓட்டைகள்
சொத்தைக் கடலையின்
சுயரூப தரிசனம்.

இறைவா
உன் விளையாடல் தெரிகிறது.

புனித நீராட்டின்
அவசியம் மட்டுமல்ல; அதன்
அவசரமும் புரிகிறது.

இதோ
கை விறகையும்
என் சிதையில் எறிகிறேன்

ஊடலில் மட்டுமல்ல
உன்னிடத்தும்
தோற்றவரே வென்றார்

சரணம்
முழுமையான சரணம்.

No comments: