பணிக்கப்பட்டது நிர்வாணம்
மனம் யாசித்தது கோவணம்
கிடைத்ததோ சொத்தைக் கடலை.
பட்டுக் கோவணத்தில்
பலப்பல ஓட்டைகள்
சொத்தைக் கடலையின்
சுயரூப தரிசனம்.
இறைவா
உன் விளையாடல் தெரிகிறது.
புனித நீராட்டின்
அவசியம் மட்டுமல்ல; அதன்
அவசரமும் புரிகிறது.
இதோ
கை விறகையும்
என் சிதையில் எறிகிறேன்
ஊடலில் மட்டுமல்ல
உன்னிடத்தும்
தோற்றவரே வென்றார்
சரணம்
முழுமையான சரணம்.
Thursday, December 6, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment