Saturday, March 15, 2008

நங்கூரமும் சுக்கானும்

வேகம் கருதி வைக்கப்பட்ட
பெரிய பாய்மரத்தால்,
காமக் காற்றில்
இப்படகு தடுமாறுகின்றது.

இறைவா,
தடுமாற்றம் என்பதும்
உனது கருணையே

தறியின் தடுமாற்றம் - நெசவு;
மத்தின் தடுமாற்றம் - வெண்ணெய்;
மனதின் தடுமாற்றம் - ஞானம்.

ஞானத்திற்கு முன்பு
வேண்டாமே மரணம்.

தடுமாற்றம் தவறில்லைதான்
ஆனால் திசைமாற்றம்?

இன்றைய அவசரத் தேவை
ஒரு நங்கூரம்;
தடுமாற்றம் குறைக்க.

நாளைய அவசியத் தேவை
ஒரு சுக்கான்;
திசைமாற்றம் தடுக்க.

No comments: