இறைவன் கொடுக்க நினைப்பதை
மனிதனால் தடுக்க முடியாது;
இறைவன் கொடுக்க மறுப்பதை
மனிதனால் எடுக்க முடியாது
பெறுவதே வெற்றியல்ல:
இழப்பதே தோல்வியல்ல.
கொடுப்பதன் மூலம் தாக்கவும்
தடுப்பதன் மூலம் காக்கவும்
அவனால் முடியும்.
எனவே
பெறுவதும் சாபம் ஆகும்;
துள்ளாதே.
இழப்பதும் வரம் ஆகும்;
துவளாதே.
மாற்றுப் போர்வைகள் சுமந்துவரும்
வெற்றிகளும் தோல்விகளும்
மாறும் மாறும் காலந்தோறும்.
காலன் மாற்றும் கணக்குகளைக்
‘கண்டு’ தெளிந்தவன்
கலங்குவதில்லை, ‘தோல்வியில்’;
கர்விப்பதில்லை, ‘வெற்றியில்’.
அவன் நெஞ்சினிலே நிறையும்
நித்திய நிம்மதி.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
Saturday, March 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment