பெருகிய வக்கிரங்களால்
மனமெலாம் குப்பைகள்
மாணிக்கம் எடுக்க
குப்பைக்குள் எறிந்தாய்
மின்னும் மாணிக்கம்
கையிலே உள்ளது;
சுவாசப்பைகளோ
மலங்களால் நிறைந்தது.
கண்கள் இருள,
கைப்பொருள் நழுவிடுமோ?
இறைவா
இது வெற்றியா,
இல்லை தோல்வியா
உனக்கு?
Saturday, March 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment